முகப்பு » ஆன்மிகம் » கந்தன் கதை

கந்தன் கதை

விலைரூ.450

ஆசிரியர் : ரவிக்குமார்

வெளியீடு: அவனருளாலே பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும், காட்சிகளும் சேர்க்கப்பட்ட நெடிய புதினம். கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தித் திரைப்படங்களில் காட்டப்பட்ட வானவர் காட்சியமைப்புகளும், கதைகளும் வரவேற்பு பெற்றன. இந்த பின்னணியில் புதிய புனைவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. சிவன், பார்வதி, ரதி, மாரன், இந்திரன், குமரன், சூரபத்மன், அகத்தியர், திலோத்தமை என கதாபாத்திரங்களின் உரையாடல்களோடு பயணிக்கிறது கதை. தற்கால மொழி நடையில் அமைந்துள்ளது.
பழனி போகநாதர் சம்பவங்கள், வள்ளி-கந்தன் இணைப்பு மாறுபட்ட கதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துார் போர் ஆயத்தங்களை காட்சிகளாக்கி எழுச்சியோடு சித்தரிக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் தேவயானையுடனான திருமணமும், திருத்தணியில் நிகழும் வள்ளி திருமணமும் சுவைபட புனையப்பட்டுள்ளன. புதினத்தின் காட்சிகள் அறுபடை வீடுகளையும் சுற்றி வருகின்றன. புராண கதைகளின் அடிப்படை தத்துவத்தைக் கூறி, கந்தன் கதை உருவான விதமும் நுாலின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது. மிகையான கற்பனையையும் காண முடிகிறது.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us