சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 18 கதைகள் இடம் பெற்றுள்ளன. அவர் எழுதிய, ‘பொன்னகரம்’ முதல் கதையாக உள்ளது. காலவரிசைப்படி கதைகளை தேர்வு செய்து தொகுத்துள்ளனர். என்றும் இனிமையுடன் வாசிக்க தகுந்த தொகுப்பு நுால். – பாவெல்