ஆன்மிக சிந்தனை இறை உணர்வை உருவாக்கும். இறைவனுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு செல்லும். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆன்மிகம் இல்லாமல் வாழ்க்கை நிறைவு பெறாது. இதை திருப்புகழ் மதிவண்ணன் தெளிவாக இந்த நுாலில் விளக்கி இருக்கிறார்.
திருப்பதி பிரம்மோற்சவம் போன்ற தெய்வீக நிகழ்வுகளில் இவர் நிகழ்த்திய பக்தி உரைகளின் தொகுப்பே இந்த நுால். ராமாயணம், கந்த புராணம், தேவாரம் என பல ஆன்மிக பொக்கிஷங்களிலிருந்து நமக்கு வாரி வழங்கி இருக்கிறார். இந்த நுால், ‘புத்தக வடிவிலான குரு’ என்றால் மிகையாகாது.
– இளங்கோவன்