வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்து உள்ள நுால். குறிப்பு கட்டத்தில் சிதறிக் கிடக்கும் எழுத்துக்களும், அதன் கீழே விடுபட்ட சொற்கள் பகுதியும் தரப்பட்டுள்ளது. அதில் ஓரிரு எழுத்துக்களை மட்டும், விடுபட்ட இடங்களில் இடை இடையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் வழியாக புதிரை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி சுவாரசியமாக எழுத்து விளையாட்டுகள் உள்ளன.
புதிருக்கான விடைகள் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன. காய்கறிகள், வடமொழிச் சொற்கள், தமிழ்ச் சொற்கள் என பிரித்து அறியும் வகையில் 100 புதிர்கள் உள்ளன. மூளை பயிற்சிக்கு ஏற்ற நுால்.
– சீத்தலைச்சாத்தன்