தமிழக மக்கள் பண்பாட்டில் சடங்குகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுால். பழந்தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட பழக்க வழக்கங்களில் தற்போதைய வாழ்வியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.
தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பவுத்தம் எச்சங்கள், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழர் வாழ்வின் பண்பட்ட சூழலை வரலாற்று பின்புலத்துடன் மிகத் தெளிவாகச் சொல்கிறது. தமிழ்ப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும் முக்கிய நுால்.
– மலர்