முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்

விலைரூ.220

ஆசிரியர் : சாயிபாத மெய்யடிமை

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஷீரடி சாய்பாபாவைக் குருவாகக் கொண்டு பெற்ற அனுபவங்களை பேசும் நுால். அந்த அனுபவங்களை அனைவரும்பெற வேண்டும். ஆன்மிக அனுபவங்களை மற்றவர் பெறவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். பகவானை அறிந்து, அவரது அருள் கடாட்சம் பெற வழிகள் கூறுகிறது. ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் 35 தலைப்புகளில் உருக்கமாக விளக்கப்பட்டு உள்ளன.

பாபாவைக் கனவில் காண முடியும்; அவருடன் பேச முடியும். அவரது கருணையையும், அன்பையும் அனைவரும் பெற முடியும் என்ற தகவலை விரிவாக விளக்குகிறது. இந்த நில உலக வாழ்வில் மட்டுமல்ல, மறு உலக வாழ்விலும் வெற்றி என, ஆத்ம சாதனையாக திகழச் செய்வார் என்கிறது.

இசைக் கருவியின் நரம்புகளிலிருந்து விதவிதமான இசை வெளிப்படுவது போல, சாய்பாபாவின் திருவருள் பல ரூபங்கங்களில், பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி வாழ வேண்டும் என்று பாபா போதித்த விஷயங்களை கதை வடிவில் விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us