முகப்பு » மருத்துவம் » நலம் நம் கையில் பாகம் –1

நலம் நம் கையில் பாகம் –1

விலைரூ.190

ஆசிரியர் : டாக்டர் கு.கணேசன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாதாரணமக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், டாக்டர் கு.கணேசன், ‘தினமலர்’ நாளிதழ் மதுரை பதிப்பில், ‘என் பார்வை’ பகுதியில் எழுதிய மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘தினமலர்’ நாளிதழில் வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. புத்தகத்தில் இடம் பெற்று உள்ள கட்டுரைகளில் மாதிரிக்கு, சில கட்டுரைகளின் தலைப்பை எடுத்துக்கொள்வோம்.

‘செலவில்லாத மருந்து சிரிப்பு, உங்களுக்கு பிரஷர் இருக்கிறதா, உங்களுக்கு கொழுப்பு அதிகமா, இருதயத்தின் எதிரிகள் யார். ‘உங்களுக்கு இரண்டாவது இருதயம் வேண்டுமா, இருதயம் காக்க பத்து கட்டளைகள், சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள், காக்க... காக்க... கல்லீரல் காக்க, மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்!’

இப்படி தலைப்புகளில் உடலை பற்றி எளிமையாக ஒரு டாக்டர் எழுதினால், யார் தான் படிக்க மாட்டார்கள். கட்டுரைகள் வாசகர்களுக்கு பீதி தராது; மாறாக மருத்துவ அறிவும், ஆலோசனையும், ஆறுதலும் தரும். நுாலை படித்து விட்டால் நோய் இருக்குமோ என்ற அச்சம் வராது; மாறாக நோய்களில் இருந்து கற்கும் வித்தையை கற்றுக் கொள்ளலாம். மருத்துவ அறிவியல் விந்தைகளை எளிதாக அறியலாம். குடும்பத்திற்கு ஒரு டாக்டர் என்பது போல, வீட்டிற்கு வீடு இந்த மருத்துவக் கையேடும் இருக்க வேண்டும்.

ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us