அன்பு, கருணை, தேடல், எதிர்பார்ப்பு, வஞ்சகம், நேர்மை, தனித்திறன் போன்ற மனித குணங்களை பேசும் சிறுகதை தொகுப்பு. எட்டு கதைகள், கொரோனா தொற்று முதல் அலையில் மக்களின் துயரங்களை பேசுகிறது. கடைசி பக்கங்கள் என்ற தலைப்பில், 27 கதைகள் உள்ளன. வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும், ‘மீண்டும் அந்த மழலைக்காலம்’ மனதை தொடுகிறது.
காவல் நிலையத்தில் இளைஞர் மரணமடைய, உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட, அவரது கர்ப்பிணி மனைவியின் தவிப்பை, ‘புதிதாய் ஓர் அதிகாரி’ கதை பேசுகிறது. ஒவ்வொரு கதைக்குள்ளும், மனித இயல்புகளை தேட முடிகிற நுால்.
– டி.எஸ்.ராயன்