முகப்பு » மருத்துவம் » நலம் நம் கையில்! பாகம் – 2

நலம் நம் கையில்! பாகம் – 2

விலைரூ.190

ஆசிரியர் : டாக்டர் கு. கணேசன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எளிமை தமிழில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்விதத்தில், ‘தினமலர்’ நாளிதழ் மதுரை பதிப்பில் வந்த, 34 மருத்துவக்கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. அன்றாட வாழ்வில் சந்திக்கும் உடல் பிரச்னைகள், அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை, தீர்வுகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன.

துாக்கம் உடலுக்கு எவ்வளவு அவசியம், மனச்சோர்வு போக்க என்ன வழி போன்ற விளக்கக் கட்டுரைகள், இன்றைய வாழ்வியல் முறைக்கு அவசியமானவை. சிறுநீரகக் கற்களை கரைக்க மருத்துவ வழிகள், பற்களை பாதுகாக்க எளிமையான முறைகள், வெயில், பனிக் கால நோய்களில் இருந்து தப்பும் முறை போன்ற தகவல்கள் ஏராளம்.

முட்டை நல்லதா, காபி, தேநீர் குடிக்கலாமா போன்ற மருத்துவ அறிவும், ஆலோசனையும் தரும் கட்டுரைகள் பல இடம் பெற்றுள்ளன. நவீன வாழ்க்கை முறையில் நோயற்று வாழ வழிகாட்டும் அற்புத மருத்துவ பெட்டகம். அனைவரும் படிக்க வேண்டிய நுால்.

ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us