முகப்பு » சுய முன்னேற்றம் » மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்

விலைரூ.70

ஆசிரியர் : சுகி.சிவம்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-சொல்வேந்தர் சுகி.சிவம்.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.முக்தி பெறுவது சுலபம் என்றார் புத்தர்,பின் பலர் ஏன் இன்னும் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள்.பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்டு என்றேனா?,பலருக்கும் அது கிடையாது என்றார் புத்தர்.இது தான் உண்மை.ஒவ்வொரு மனிதனும் இறையின் துளியே.தான் இறை என்ற கடலின் ஒற்றை அலை என்பதை மனிதர்கள் உணருவதே இல்லை.தன்னை இறையாக உணர சராசரி மனிதனுக்குப் பாடத்திட்டம் ஒன்று தேவைப்படுகிறது.அரிச்சுவடி போல், வாய்ப்பாடு போல்,சின்ன அளவில் மனிதன் தெய்வமாகும் பாடத்திட்டமாக இந்நூல் பிறந்துள்ளது. இதை எழுத நீ என்ன இறைவனா? என்று யாராவது கேட்டால் எழுதும்போது இறைவன்....படிக்கும் போது மனிதன் என்பதே என் பதில். என் தகுதிதயப் பற்றிய விசாரணையில் உங்கள் பொன்னான காலத்தை வீண் செய்யாது உங்களை உயர்த்தும் அல்லது உயர்த்தும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us