விருத்தப்பாவில் எழுதப் பெற்ற முதல் காப்பியமான சீவக சிந்தாமணி பாடல்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஏமாங்கத நாட்டின் வளத்தை விவரிக்கும் பாடலில் கற்பனை நயம் வெளிப்படுகிறது. தென்னை மரத்திலிருந்த தேங்காய், பாக்கு மரத்தின் குலைகளைக் கிழித்து, மா மரத்தின் பழங்களை வீழ்த்தி, வாழை மரத்தின் இனிய பழங்களைப் பிளந்தது என்று வர்ணிக்கிறது.
முயற்சியால் சேர்க்கும் செல்வமே சிறந்தது. பிற வழியில் சேர்க்கும் செல்வம் சிறந்ததல்ல என்ற உயர்ந்த அறக் கருத்தை தரும் நுால்.