முகப்பு » கவிதைகள் » ஞானியின் பச்சைக்கிளி

ஞானியின் பச்சைக்கிளி

விலைரூ.100

ஆசிரியர் : மு.முருகேஷ்

வெளியீடு: அகநி

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனித வாழ்வியல், நாட்டு நடப்புகளை அலசும் ஹைக்கூ கவிதை தொகுப்பு நுால்.‘அழுக்கு இரயிலடியில் தடதடக்கும் புதுப்பாட்டு; இரசிக்கும் காதுகள்’ என பயணியர் குறைவான ரயில் நிலையத்தை நினைவூட்டுகிறது.

‘மழை ராத்திரியில் துளித்துளியாய் நனையும் கனவுகள்; விடிந்தால் தேர்வு’ என மழையை ரசிக்கச் சொல்கிறது. ‘இறகுலர்த்தும் கோழிக்குஞ்சு அசைவற்று உறைகிறது; தலைக்கு மேல் பருந்து’ என கோழிக்குஞ்சுகளின் மரண பயத்தை உணர்த்துகிறது.

‘எச்சிலெடுக்கும் குழந்தை ஒரு கை துடைக்க; மறு கை மூடும் ரவிக்கை’ என பெண்ணின் கண்ணியத்தை பேசுகிறது. அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை, கவிதை மொழியில் பேசும் நுால். கவிதை எழுத முயற்சிப்போருக்கு பயன்படும்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us