முகப்பு » இசை » பாட்டினில் அன்பு செய்!

பாட்டினில் அன்பு செய்!

விலைரூ.100

ஆசிரியர் : ஆத்துார் சுந்தரம்

வெளியீடு: புரட்சி பாரதி பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தைகள் மழலைக்குரலில் பாடி மகிழ ஏற்ற வகையில் எழுதப்பட்ட இனிய சந்தப்பாடல்களின் தொகுப்பு நுால். அன்பை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எளிய, இனிய மொழி நடையில் எழுதப்பட்ட 21 பாடல்கள் உள்ளன. அனைத்தையும் மனதில் பதித்து இனிமை பொங்க பாட முடியும். பாடல் சந்தங்கள் இனிய காட்சிகளை மனதில் விரிக்கும்.
‘தமிழை பேசும் மொழியக்கா’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது முதல் பாடல். இதில், ‘கொஞ்சி பேசும் தேனக்கா, கூண்டில் உறைவது ஏனக்கா... ஆரக் கழுத்து நகையக்கா, அழகே உனக்கு பகையக்கா...’ என, சிந்திக்கும் கேள்வியை எழுப்பி பதில் சொல்கிறது.

இது போல முழுதும் இனிய சந்தத்தில் அமைந்த பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மொழியும் அறமும் கற்பிக்க உதவும். மழலைகளுக்கு உதவும் இனிய சந்த பாடல்களின் தொகுப்பு நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us