முகப்பு » ஆன்மிகம் » காஞ்சியின் கருணைக்கடல் – பாகம் 2

காஞ்சியின் கருணைக்கடல் – பாகம் 2

விலைரூ.430

ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காஞ்சிப் பெரியவர் என பக்தர்களால் பக்தியுடன் வணங்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதாரண மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கூறுபவராக இருந்தார் என்பதை எடுத்துரைத்திருக்கும் நுால்.

உதாரணத்துக்காக சில முத்துக்கள்...
* கலை என்பது உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு  வேண்டியிருக்கிறது
* அன்பால் உலகிலுள்ள வேற்றுமை மறையும். இதனால், உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும்
* உடல் உபாதையைப் போக்க, இயற்கை வைத்தியப்படி உணவே மருந்து, மருந்தே உணவு என எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டில் கூட தத்துவ விளக்கம் கொண்டது பாரதப் பண்பாடு
* எல்லா மதங்களின் லட்சியமும் கடவுளை அடைவது தான். எனவே, மதமாற்றம் தேவையில்லை என புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் எந்த மதத்தில் பிறந்திருக்கிறாரோ அதன் மீது பற்று அவசியம். அந்தந்த மத நெறிப்படி தான் வாழ வேண்டும்
* புத்திக்கு வேலையின்றி முட்டாள்தனமாகத் தோன்றும் செயல்களை செய்வது தான் நிஜமான அன்பை, தியாகத்தை எடுத்துக் காட்டுகிறது. அன்பு பீறிட்டு கிளம்பும்போது மூளையால் நியாய, அநியாயத்தை சிந்திக்க முடியாது.
இந்த பொன்மொழிகளை படிக்கும்போது, காஞ்சிப் பெரியவர் முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us