தெலுங்கில் அண்மை காலமாக, ‘நானிலு’ என்ற நான்கு வரி கவிதை பிரபலம் அடைந்து வருகிறது. அதேபோன்று, நான்கு வரிகளில் தமிழ் இலக்கிய நயத்துடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு.
ஒவ்வொரு கவிதையும் இசை மொழியாக உணர வைக்கிறது. காதலியின் நினைவை, ஐம்புலன்களை அடக்கி ஆறாவது புலனாய் உருவம் கொடுக்கிறது. காகித ஓவிய வடிவில், குழந்தைகளை கொண்டாட சொல்கிறது. மரம் வெட்டுவதால் ஏற்படும் பாதிப்பை கோடிட்டு காட்டுகிறது.
மனநலம் பாதித்தவரை பரிதாபமாய் பார்க்கும்போது, அவர் நாய்க்கு ரொட்டி ஊட்டுவதாய் கூறும் கவிதை மனதை நெருடச் செய்கிறது. ஒவ்வொரு நாலு வரி கவிதையும், சமூக சிந்தனைகளை துாண்டும் விதமாக அமைந்துள்ளது.
–
டி.எஸ்.ராயன்