கலைகளை பட்டியலிட்டு காட்டும் நுால். நுண்கலைகளான கட்டடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை, வார்ப்புக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, மருத்துவக் கலை, சமயக் கலை, தத்துவக் கலை, இலக்கியக் கலையை விளக்குகிறது.
சங்க காலத் தமிழ் மன்னர்களின் அரண்மனை அமைப்பு முறை, துாண் அமைப்பு முறை, பத்தினிக் கோவில் பற்றி எடுத்துரைக்கிறது. கட்டடக் கலை பற்றியும் எடுத்துரைக்கிறது. ஓவியக் கலையை எடுத்துரைத்து ஆதி மனிதனின் குகை ஓவியங்களை உணர்த்துகிறது. சித்தன்னவாசல் ஓவியங்களையும், தஞ்சை ஓவியங்களையும் எடுத்துரைக்கிறது.
வீரக்கல், லிங்கம், உலோகத்தால் ஆன தெய்வத் திருமேனிகள் வார்ப்புக் கலை சார்ந்தவை என்றும் தெரிவிக்கிறது. சங்க காலம் முதல் தற்காலம் வரை, மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் அழகு கலைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் பெட்டகம்.
– முகிலை ராசபாண்டியன்