தேசிய விடுதலைக்கு பெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த நுால். அச்சில் இல்லாத நுால்கள், நேர்காணல்கள், இதழ் செய்திகள், நேரடி வாக்குமூலங்கள் என, பல தளங்களில் தகவல்களை திரட்டி தரப்பட்டுள்ளது.
நேதாஜி சென்னைக்கு பயணம் செய்ததில் துவங்குகிறது. தமிழகத்தில் அவருக்கு முக்கியத்துவம், சந்திப்புகள், தொடர்ந்து தலைவர்களுடன் கொண்டிருந்த உறவு பற்றி பறை சாற்றுகிறது. நேதாஜிக்கு ஏற்பட்டிருந்த செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. தேசியத் தலைவரின் பன்முகங்களையும், செயல்பாட்டின் சிறப்பையும் விவரிக்கும் நுால்.
– ராம்