முகப்பு » கட்டுரைகள் » தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து

தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து

விலைரூ.280

ஆசிரியர் : எஸ்.இளங்கோ

வெளியீடு: அகநி

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்பட உரையாடல் சிறப்புகளை வெளிப்படுத்தும் நுால். சில உரையாடல் பகுதிகள் அப்படியே எழுத்து வடிவில் தரப்பட்டுள்ளன. திரைக்கதைகளில் சமூக நீதிக் கோட்பாடு வெளிப்படுகிறது.

ராஜகுமாரி திரைப்படத்தில் துவங்கி, கனல் பறக்கும் உரையாடல்களோடு தொடர்ந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. காதலன் –- காதலி, கதாநாயகன் – -வில்லன், வில்லன்- – கதாநாயகி என எல்லா வகையிலும் சிந்தனை இடி மின்னலாக தெறிப்பதை எடுத்துக்காட்டுகிறது.

காட்சிகளில் பகுத்தறிவை புகுத்துவது சிறந்த உத்தி என உணர வைக்கிறது. கதாசிரியர்கள் மட்டுமன்றி நாடகக்கலையை தெரிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us