முகப்பு » வரலாறு » வையகம் போற்றும் வள்ளல் பேகன்

வையகம் போற்றும் வள்ளல் பேகன்

விலைரூ.150

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய பேகனை பற்றிய இலக்கிய நாடக நுால். பழனி மலைப்பகுதியை, ஆவியர் குடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை பொழியும் மலைச்சாரலில் கருமேகங்களைக் கண்டு ஆடிய மயில், குளிரில் நடுங்குவதாக எண்ணி போர்வையை போர்த்தி விட்டவன். இதனால், மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் என அழைக்கப்பட்டான்.

உணர்வு, அறிவை வெல்கிறது. இதையே கொடை மடம் என்று குறிப்பிடுகிறது. தமிழர் ஆட்சி, கொடை, பண்பாடு, பரந்த மனப்பான்மை, சமூக நெறி எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வரலாற்று செய்திகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. அவை திறம்பட அமைக்க பெற்றிருப்பது தனிச்சிறப்பை தருகிறது. படிக்க உகந்த நாடக நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us