திருமுறைகளை ஓதி, கடவுளை வணங்கிப் பயனடையும் நோக்கில் தொகுக்கப்பட்ட நுால். சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை 27 புலவர்கள் பாடியவை உள்ளன.
நாகப்பட்டினம், காயாரோகண ஈஸ்வரர், நீலாயதாட்சி கோவில் அப்பர் பாடலில் தந்துள்ள விபரங்கள் சிறப்பானவை. சிவ பெருமானை வழிபட்ட தெய்வங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. திருச்செங்காட்டாங்குடியில் விநாயகரும், திருமுருகன்பூண்டியில் முருகனும் வழிபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு ஏற்ற பக்தி நுால்.