தொல்லியல் துறையில் நீண்ட காலம் அனுபவம் மிக்கவர் எழுதியுள்ள இந்த நுால், தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட சேரர்- -– மழவர் வரலாறு பற்றியது. மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது; அரிய தகவல்களை கொண்டுள்ளது.
சேரர் பற்றி இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. பிற்கால சேரர்கள் ஆட்சி காலம், எடுப்பித்த கோவில்கள், அரண்மனைகள், கொடைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சேரர் – மழவர், அரியலுார் மழவராயர் வரலாறு புதிய பார்வையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மழவர் பற்றிய தகவல்களும் அரிய செய்திகளைத் தாங்கியுள்ளன. வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு புதிய விருந்தாகும் நுால்.
– நாதன்