வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
திறக்க முடியாத பூட்டு, குறும்பு கிழவி, முட்டை கலக்கி, மனோவசியம், குடை, நிசப்தம், விருந்து மற்றும் வழி அறிதல் என ஒன்பது சிறுகதைகள் உள்ளன.
சில வித்தியாசமான க்ரைம் கதை போன்று விவரிக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஆச்சரியம் கலந்த செய்திகளை கூறி முடிக்கின்றன. அவற்றில், ‘குறும்பு கிழவி’ என்ற சிறுகதை, வாசிப்போர் கண்களில் நீரை வர வைக்கும். கிராமத்து பின்னணியில் குறும்பு கிழவியை விளையாட்டுத்தனமாக சித்தரித்தாலும், முடிவில் மனதை கனக்கச் செய்கிறது. ‘நிசப்தம்’ பேச்சுத் திறன் குறைபாடுள்ளோர் பற்றிய தகவல்களை அறியும் வண்ணம் உள்ளது.
சிந்தனைக்கு உற்சாகமூட்டும் நுால்.
– வி.விஷ்வா