அறிவுபூர்வமான துணிச்சல் மற்றவர்கள் பாராட்டை பெறும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது என்பதை விளக்கும் நுால்.
அறிவும், துணிவும் இணைய வேண்டும். நம்மை சூழ்ந்துள்ள எதிர்ப்பு, இடையூறுகளுக்கு காரணமான தீக்குணங்களை அகற்றி நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக்கிறது.
வறுமை, நோய், குற்றச்சாட்டுகள், உரிமை பறிபோதல், அன்பை இழத்தல் போன்ற காரணங்களுக்காக ஏற்படும் மன அச்சத்தை நீக்கும் வழிமுறைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. வலிமையான நெஞ்சில் துணிவுடைமை சுடர் விட்டு ஒளிரும் என விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்