தமிழ் எழுத்துத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தவறுகளை அகற்றவும் வழிகாட்டியாக உதவும் நுால். சிறிய பிரச்னைகளை சரி செய்து, துல்லியமான மற்றும் பிழையற்ற தமிழ் எழுத்தை உறுதி செய்வதற்கான கருவியாக உள்ளது.
சந்திக்கக்கூடிய பிழைகளை 29 பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, மொழிக்கு முதலில் வராதவை, பொருள் வேறுபடும் சொற்கள், ஒருமை, பன்மை வேறுபாடுகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பிழைகளை எவ்வாறு தவிர்ப்பது, அவற்றை திறம்பட சரி செய்வது பற்றி விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த நுாலில் உள்ள தகவல்களை ஊன்றி மனம் கொண்டால், தமிழை பிழையின்றி எழுதும் பயிற்சியை பெறலாம்.
– வி.விஷ்வா