பெண்களின் உயர்வு மற்றும் புகழ் பற்றிய தகவல்களை தரும் நுால். பெண்கள் பற்றிய பொன்மொழிகளும், தனித்துவமான குணங்களும் தரப்பட்டுள்ளன.
பழமொழிகள், பொன்மொழிகள் கலவையை வழங்குகிறது. அவை சிந்தனையைத் துாண்டுகின்றன. தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள ஆழமான மரியாதையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களின் எண்ணங்கள் காற்றை விட வேகமானவை போன்ற சொற்றொடர்களுடன், சமூகத்தில் பெண்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை வெளிப்படுத்தியது. பெண்களின் புத்திசாலித்தனம், நுண்ணறிவை காட்டுகிறது.
பெண்களை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றி மேம்படுத்தும். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை நேர்மையாக ஆராயத் துாண்டும். பெண்களை கொண்டாடும் நுால்.
– வி.விஷ்வா