வெற்றி அடைவதற்கான மனநிலையை வளர்க்கும் வழிகாட்டியாக மலர்ந்துள்ள நுால். லட்சியத்தை நோக்கும் பயணத்தில் உத்வேகம் ஊட்டும்.
வெற்றிச் சிந்தனை என்பது அறிவின் துகள்களாகும்.நுண்ணறிவை வழங்கும் விதமாக விளக்கி எழுதப்பட்டுள்ளது. பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தை உருவாக்கும் கருத்துக்கள் உள்ளன.
தன்னம்பிக்கை, நல்லது செய்தல், பின்னடைவின் போதும் நிலையாக முயற்சி செய்தல் என முக்கியத்துவத்தை போதிக்கிறது. அன்றாட வாழ்வு நடைமுறைகளில் இவற்றை பயிற்சியாக பெற கற்பிக்கிறது. நேர நிர்வாகம் செய்ய அட்டவணை போட்டு காட்டுகிறது. முன்னேற்றப்பாதையில் நடைபோட பயன்படும் நுால்.
– வி.விஷ்வா