சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில்உருவாக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். வாழ்வில் முன்னேறும் நம்பிக்கையை முதன்மையாக கொண்டுள்ளது.
உடல், உள்ளம், இயற்கை வளத்தை பேணும் வகையிலான விழிப்புணர்வே, பாடல்களின் மையக் கருத்தாக உள்ளது. விளையாட்டாக பாடிக்கொண்டே கருத்துக்களை உள்வாங்க எளிய சந்த நயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அன்றாட கடமைகளை வலியுறுத்தும் விதமாக அதிகாலை விழித்திடுவேன், மண்ணுக்குள் அதிசயம், திடமாய் உடம்பை வளர்த்திட, எங்கே வைட்டமின் போன்ற தலைப்புகளில் புனையப்பட்டுள்ளன. நன்மையும் தீமையும் என்ற தலைப்பில், ‘நன்மையும் தீமையும் உடனே இல்லை நாள் கழித்தும் வந்திடலாம்’ என்று பதிய வைக்கிறது. சிறுவர் விரும்பும் பாடல்களின் தொகுப்பு நுால்.
– ஒளி