இயல், இசை, நாடகத்தை திறனாய்வு செய்யும் நுால். திருக்குறள், சைவ நெறியை ஒப்பாய்வு செய்துள்ளது. காமத்துப்பாலில் இனிமை, எளிமை, புதுமை பேசப்பட்டுள்ளன.
கிரேக்க இலக்கணத்தில் தொடரியல் பற்றிய சிந்தனை தமிழ் மொழியில் அமைந்திருப்பதை உரைக்கிறது. அச்சு ஊடக வருகை, தமிழ் இலக்கணத்தில் ஏற்படுத்திய பரிணாமத்தை குறிப்பிடுகிறது.
ஐரோப்பியர் வருகையால் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது. தனித்தமிழ் நடை இசைத்தமிழ் இழைந்தோடும் கவிதை நடை நாடகத் திறமும் விவரிக்கப்பட்டுள்ளன. கருத்து பெட்டகமாக உள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்