முதுபெரும் எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணனின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றிய சுருக்கமான நுால். இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்தாளரின் குடும்ப பின்புலம், சமூக வாழ்வு துவங்கி, எட்டு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை மையமாக உள்ள கிராமத்தில் பிறந்த அனுபவங்களை விவரிக்கிறது.
பெண்கள், சாதிய சமூகம், சமயங்கள் மீதான பார்வை, சிலாகித்து எழுதிய மொழி நடை என மேன்மைகளை விளக்குகிறது. பள்ளி பற்றிய எழுத்தாளரின் சிந்தனை, வாசகர் மற்றும் பிற எழுத்தாளர்களுடன் கடிதம் வழியாக உருவாக்கியிருந்த நட்பு, பிணைப்பு பற்றி நெகிழ்வுடன் தகவல்களை பகிர்கிறது. மறைந்த எழுத்தாளரின் வாழ்க்கை சித்திரத்தை மனதில் பதிக்கும் நுால்.
– மதி