தமிழ் இசையின் தோற்றம், வளர்ச்சியை ஆராய்ந்து சான்றுகளுடன் கூறும் நுால். பண், ராகம், இசை, அருளாளர் பாடல்களில் காணப்படும் அற்புத நிகழ்வுகள் என அலசி ஆராயப்பட்டுள்ளது.
தொல்காப்பியம், யாப்பருங்கலம்,தண்டியலங்காரம் போன்ற இலக்கணங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், இசை மரபுகள், கோவில் கல்வெட்டுகள், இன்றைய இசை வடிவங்கள் என எல்லா ஆதாரங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக இசை, பழைய தமிழிசையின் புது வடிவம் என நிரூபணம் செய்யும் நுால்.