நிவேதிதா பதிப்பகம், 1, புதூர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 224).
சென்னை கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் பொதுச்செயலராக இருந்த டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ், மறுமலர்ச்சித் தமிழ் இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். சில நல்ல படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
நடுநிலையுடன் கூடிய இவருடைய விமர்சனங்கள் கற்றறிந்த இலக்கிய அன்பர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக எழுத்தாளர் விந்தன் பற்றி இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். க.நா.சு., கண்ணதாசன், சாலை இளந்திரையன், ஞா.மாணிக்கவாசகன் போன்றோர் குறித்தெல்லாம் இவர் எழுதியுள்ளவை படித்துப் பார்த்து மகிழத்தக்கவை. திறனாய் வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் புத்தகம்.