சிப்பி புக்ஸ், எண்.24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 152)..
பாரதியார் "சுதேச மித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்ததையும் தானே ஆசிரியராக இருந்து "இந்தியா' பத்திரிகையை நடத்தியதையும் பலர் அறிவர். ஆனால், விஜயா, கர்மயோகி, தர்மம், சூரியோதயம், சக்ரவர்த்தினி, சர்வ ஜன மித்திரன் ஆகிய பத்திரிகைகளுக்கு பாரதியின் பங்களிப்பு என்ன என்றும் இந்த நூல் கூறுவது இதன் சிறப்பு அம்சமாகும். சின்ன நூலில் ஏராளமான தகவல்கள்.
பாரதியார் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களையும் பின்னணியாக ஆசிரியர் இணைத்து இருப்பது மிகவும் போற்றப்பட வேண்டியதாகும்!