முகப்பு » ஆன்மிகம் » ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மலர்கள்

ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மலர்கள்

விலைரூ.65

ஆசிரியர் : க.மணிவர்மா

வெளியீடு: மெர்குரியன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 19/16, கருணாநிதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 160.)

ஆன்மிகம் பற்றிய அளவில்லாத இனிய தகவல்களை அள்ளித் தரும் நூல் இது! இதுபோன்ற தகவல் திரட்டு நூல்கள் ஆயிரம் ஆயிரம் வந்தாலும் அவை யாவும் விற்றுவிடும்! ஏனெனில், ஒரே தகவலை ஒவ்வொரு நூலிலும் மாற்றி மாற்றி எழுதி இருந்தாலும் படிக்க அல்வா போல் சுவையாக இருக்கிறது அல்லவா?
இந்த நூலிலும் விநாயகர், முருகன், சிவன், சக்தி, திருமால், புத்தர் என்ற தலைப்புகளில் இணைப்பு ரயில் பெட்டிகளாக ஆன்மிக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே தகவல் பல நூல்களில் வரலாம்; ஆனால், இந்த ஒரே நூலில் "ஐந்து + மூன்று + இரண்டு,' "இராஜேஸ்வரி ஆலயம்' என்ற இரு தலைப்புகளும் பக்கம் 113லும், பக்கம் 149லும் இருமுறைகள் வந்துள்ளன. இதுமட்டுமல்ல... பிழையின்றி கடவுளை வழிபட வழிகாட்டும் இந்த நூலில் கடவுளே மன்னிக்க முடியாத பல பிழைகள்... "ஸ்வானம்' செய்யாமல் ஆலயத்திற்குள் வரலாகாது என்பது ஒன்று. இந்த வார்த்தையைப் பார்த்த பலரும் வேதனைப்படுவர். இனியேனும் ஆன்மிக மலர்கள் முள் இல்லாமல் பூக்கட்டும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us