முகப்பு » இலக்கியம் » வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும்

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும்

விலைரூ.50

ஆசிரியர் : முனைவர் கே.ஆர்.திருவேங்கடசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98. போன்: 2635 9906, 2625 1968. (பக்கம்: 126.)

வள்ளுவர் மானுடவேதம். 86 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எளிமையாய், தெளிவாய், சுருக்கமாய், ஆழமாய், பரந்த விஷயங்களை தமிழில் செய்து காட்டிய வள்ளுவருக்கு தமிழர்கள் கடன்பட்டுள்ளோம்.குறளில் காணப்படும் நீர் - நில வளம், பொருள். உழவு - இயற்கை, சொல்லமைதி குழுச் சொற்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் பிற சமயங்களும் வள்ளுவமும் ஓர் ஒப்பீடு என்று மூன்று பெருங் கட்டுரைகளின் ஆய்வடங்கல் இந்நூல்.நீர் காணப்படும் எல்லா குறள்களையும் தொகுத்து, தொய்வு ஏற்படாதவாறு ஆசிரியர் கூறியுள்ளது பாராட்டத்தக்கது. `அறன் வலியுறுத்தல்' (பக்.35-44) எல்லா மதத்தினரும் படித்து நடைமுறைப்படுத்த தூண்டும். மேலை நாட்டவரைக் கவர்ந்த குறள்கள் (பக்.106-108), மற்ற மதங்களோடு ஒப்பீடு (பக்.90-119) இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us