சிவமயம்

விலைரூ.200

ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
திருமகள் நிலையம், எண். 16, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 400.)

சிவபெருமானின் பெருமை குறித்தும், சித்தர்களின் பெருமைக் குறித்தும் பேசுகிறது சிவமயம்.
ஆங்காங்கே, அருமையான ஆன்மிக விளக்கங்கள்.
""சிவத்தைத் தழுவியவர்களைத்தான் சைவர்கள் என்கிறோம். சைவர்களின் சின்னம் திருநீறாகும். நீர் என்றால் பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர்தான். ஆனால், திருநீறு என்றாலோ, அது விபூதியைக் குறிக்கும். விபூதி என்ற சொல்லும் ஒரு காரணப்பெயர்தான். அதைப் பிளந்து பார்த்தாலே, பொருள் விளங்கிடும். நமது உடலானது, பஞ்ச பூதங்களால் ஆனது. சுருக்கமாகப் "பூதி' என்பர். இந்த பூதியில் திருநீறு சேர்ந்திடும் போது - பூதி, விபூதி ஆகிறது.''
ஆன்மிக மர்மம் என்ற தளத்தில் கதையை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். இவரது ஆன்மிக மர்ம நாவல்கள் சின்னத்திரையில் பொலிவதும் நாடறிந்ததே!
கதை சொல்லிக்கொண்டே ஆன்மிகக் கதாகாலட்சேபமும் செய்வதில் வல்லவராக இருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். இவரது ரசிகர்களுக்கு இது பெரு விருந்து!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us