திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 522, டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை18. (பக்கம்: 264. விலை: ரூ.80).
கவியோகி முனைவர் பி.பாண்டியன் சித்தர் பரம்பரையில் வந்தவர். தமிழ் மொழி ஒரு சித்தர் மொழி எனும் கொள்கையை உடையவர். தமிழ் கற்றால், பொருள், பொருள் வழி அறமும், இன்பமும் வீடும் கிட்டும் என்பது கவிஞரின் கருத்து! தமிழைப் பிடித்தவரையும், தமிழ் படித்தவரையும் தமிழ்த் தாய் கைவிட மாட்டாள் என்று இந்நூலில் தெளிவுபடப் பாடியுள்ளார். தமிழன்பர்கள் அனைவரும் இந்நூலைப் படித்து தமிழ் தாயின் பெருமையை உணர வேண்டும்.