பெண்களை மிகவும் ஈர்க்கும் காதல், மர்மம் என்ற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை. தெய்வீகம் சூசக தகவல்களை தெரிவித்து வர, நன்கு பயன்படுத்திக் கொள்கிறது ஒரு குடும்பம். ஒரு கட்டத்தில், பேராசையில் தவறு செய்கிறது அந்த குடும்பம்.
ஒரு கர்ப்பிணிக்கு காமதேனு காட்சி அளிக்கிறாள். பிறந்தது தெய்வீகக் குழந்தையாக பார்க்கப்படுகிறது. வளர்ந்த பின் காதலில் விழுந்த பெண்ணை கொன்று விடுகிறது குடும்பம்.
அடுத்த முறையும் இது போன்று பிறந்த பெண்ணுக்கும் காதல் தோன்றுகிறது. அதற்கு எதிரான சக்தியை கடந்து காதல் நிறைவேறியதா என்பது தான் கதை.
– இளங்கோவன்