அவ்வை, எண் 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 224)
"காசி முதலாகிய நன்னகரியெல்லாம் / கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா' என்று காஞ்சியில் தொடங்கி, "கடி பொழில்சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே' என மல்லை முடிய 13 திருப்பதிகள் பற்றியும், நடுநாட்டுத் திருப்பதிகளாகிய திருக்கோவலூர், திருஅயிந்திரபுரம் ஆகிய இரண்டு திருப்பதிகளையும் தொண்டை நாட்டுத் திருப்பதிகளுடன் சேர்த்துக் கூறும் மரபினைப் பின்பற்றி அவற்றையும் சேர்த்து 15 திருப்பதிகள் பற்றிய விளக்கமான நூலிது. 1971ல் வெளியான இந்நூல், தற்பொழுது திருத்திய செவ்விய பதிப்பாக வெளிவந்துள்ளது.கண்ணன் கழல் இணைகள் நண்ணும் மனமுடைய நூலாசிரியர் அந்தந்த திருப்பதிகளில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை சேவித்த பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது மிகவும் சிறப்பாகும்.