விலைரூ.50
புத்தகங்கள்
Rating
வானதி பதிப்பகம், 23, தீதையாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 90)
குழந்தைகளுக்கான பாடல் எழுதும் கவிஞர்களின் எண்ணிக்கை தமிழில் மிகவும் குறைவு. அழ.வள்ளியப்பா, பூவண்ணன் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் வரிசையில், சுப்ர.பாலனும் இடம் பெற தகுதியுடையவர் என்பதை, இவருடைய இந்த சிறுவர் பாடல் தொகுப்பு நூல் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.
இந்த தொகுப்பில் உள்ள சில பாடல்கள், கர்நாடக மாநில அரசின் பாடநூல்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நூலில் உள்ள பாடல்களை படித்து பார்க்கும் போது, தமிழ் நூல் பாடப்புத்தக தேர்வு குழுவினர்களும் தங்கள் கவனத்தை இந்த சிறுவர் பாடல் தொகுப்பின் மீது திருப்பலாம் என்று சொல்ல தோன்றுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய