சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வான வில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம்.
பாரதியார், வ.வே.சு.ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் தமிழ்மகன். புதிதாக எழுதவரும் இளம் எழுத்தாளர்களுக்கு இந்தக் கதைத் தொகுதி ஒரு பாலபாடமாக இருக்கும்.
எஸ்.குரு