குழந்தைகளுக்கான ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. டால்பின்புரத்தில் வசிக்கும் ‘டால்’ – க்கும், மீசையூரில் வசிக்கும் ‘ழீ’க்குமான சந்திப்பில் நடக்கும் கதைகளின் தொகுப்பு, இந்த புத்தகம். ‘டால்’ என்றால் டால்பின்; ‘ழீ’ என்றால் தங்கமீன். அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சிறுகதையாக எழுதப்பட்டு உள்ளன. சிறுகதைகள் தனித்தனியாக இருந்தாலும், மொத்தமாக வாசிக்கும் போது, சிறிய நாவல் போல் உள்ளது. கதைக்களமும், அதன் பெயர்களும், சம்பவங்களும், குழந்தைகளுக்கானதாகவே உள்ளன. வார்த்தைகளில் தெரியும் புதிய உலகத்தை, ஓவியங்கள் கண் முன் நிறுத்துகின்றன.