சமுதாய உணர்வுடன் சேவை செய்த தலைவர்களுள் ஒருவர்; அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர்; நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர் எல்.கே.துளசிராம். அவரது வரலாற்றைச் சொல்லும் நூல் இது. பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து சென்று, பிரிட்டன் பாராளுமன்ற கூட்டுக்குழு முன் சாட்சியமளித்து, பின்னாளில் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்தவர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், பாரதியின் கவிதை நூல்கள் தடை செய்யப்பட்டன. அப்போது சட்டசபையில் பாரதியின் பாடல்களைப்பாடி புரட்சி செய்தார். சவுராஷ்டிரா சபை, சவுராஷ்டிரா பள்ளி மேன்மைக்கு பாடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தவர். போராட்டங்களில் பங்கேற்றவர்.
கைத்தறி நெசவாளர்களுக்காகப் பாடுபட்டவர். அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கியவர். தன் உழைப்பால் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்பவர். எல்.கே.துளசிராம் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. இது தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல; சமூக முன்னேற்ற சரித்திரம்.