‘கண்கள் இமைக்கா கண்டு ரசித்த காட்சிகள் எத்தனை எத்தனையோ; கழன்றிட முடியா கவியினில் அடங்கா கோடியை மிஞ்சும் மிஞ்சுடுமே! எண்ணம் முழுக்க இனிதுற வலம்வரும் இதயம் வருடும் வருடிடுமே; ஏற்றம் இறக்கம் எழிலார் குரல்வளம் இயக்கம் உயர்வு உயர்வாமே!’ என்ற கவிதை வரிகள், சிவாஜியின் நடிப்புக்கு நிகராக வேறு எவரும் இல்லை என்கிறது இந்நூல்.