நுாலாசிரியர் வேலுசாமி யார் யாரிடம் உதவி பெற்றாரோ அவர்களைப் பற்றி சுருக்கமாக, ஒவ்வொருவரோடும் தொடர்பு கொண்ட நிகழ்வுகளை பதிவு செய்து நுாலாகத் தொகுத்துள்ளார். வாழ்க்கையில் நடந்த நன்றி கூறத்தக்க சில நிகழ்வுகளின் வழி, இன்றைய எதிர்கால சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய சில வித்துக்களால் நல்ல முத்துக்கள் கிடைக்கக்கூடும் என்கிறது இந்நுால்.