தமிழகத்தின் விடிவெள்ளி, ஈ.வெ.ரா., தமிழுணர்ச்சியையும், தமிழனின் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பிய மாமேதை. சமூகப் புரட்சி சிந்தனைகளின் பிறப்பிடமாக இருந்தது மட்டுமின்றி, மக்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அரசியல் கடலில் முதல்வர் பதவிக்காக மூழ்கிப் போனவர்களுக்கு மத்தியில், தம்மை நாடி வந்த முதல்வர் பதவியை மறுத்த திராவிட இயக்கங்களின் பிதாமகன், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது இந்நுால்.