நுாலாசிரியரின் கவிதை நுால் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கிறது. இலையுதிர் காலம் கொலையுதிர் காலம் ஆனது போல், ‘அதிசயம் ஆனால் உண்மை’ எனும் நிலை மாறி, ‘அதிசயம் ஆனால் பொய்’ எனும் தலைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். தன் கவிதை வரிகளில், ‘மூட்டை துாக்கிப் பிழைப்பு நடத்துவதாக முன்னாள் மந்திரிகளின் முதற்பக்க செய்தி’ அதிசயம் ஆனால் பொய் என்கிறார். கற்பவர் இதயத்தைப் பட்டென்று தொக்கும் பைந்தமிழ் புரட்சி வடிவம் தமிழ்ப்பித்தன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.