கேரளாவில் இஸ்லாம் காலுான்றியதை வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
எண்ண அலைகளில் துவங்கி, கடல், பழந்தமிழர் வாணிபமும் பன்னாட்டு தொடர்பும், அரேபியா, அரேபியரின் வணிகம், குதிரை, இஸ்லாம், சந்திரன், சேரமான் பெருமாள் இயல்களின் கீழ் தகவல்கள் உள்ளன.
முதல் இயலில், தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய தகவல் வரலாறு மற்றும் சங்க கால இலக்கிய பின்னணியுடன் அலசித் தரப்பட்டுள்ளது. அடுத்து கடல் பற்றிய குறிப்புகளும், இலக்கிய பின்னணி மற்றும் உரிய தரவுகளுடன் தரப்பட்டுள்ளது. ஆய்வுப் பூர்வமான தகவல்கள் அடங்கிய நுால்.
– பாவெல்