முகப்பு » கேள்வி - பதில் » மாறாது என்று எதுவுமில்லை

மாறாது என்று எதுவுமில்லை

விலைரூ.160

ஆசிரியர் : பெருமாள் முருகன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மலம் அள்ளும் பணியை செய்வோரின் அவதியை வெளிப்படுத்தும் நுால். இந்த பணி செய்வோர் நலனுக்காக செயல்பட்டு வரும் பெஜவாடா வில்சன் பேட்டியாக பதிவாகியுள்ளது.

கேள்வி – பதில்களில் பல மாநிலங்களிலும் இந்த பணி செய்வோரின் நிலையை விளக்குகிறது. வலி நிறைந்த வாழ்க்கையை மாற்றும் வகையில் எதிர்ப்பை பதிவு செய்கிறது. இதற்கான போராட்ட விபரங்களையும் தருகிறது.

மலம் அள்ளும் பணியை இயந்திரமயமாக்குவதன் அவசியத்தை உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்படுத்துகிறது. அதற்காக நடத்தி வரும் சட்டப் போராட்ட வடிவங்கள் பற்றியும் விவரிக்கிறது. ஒழிக்கப்பட வேண்டிய இந்த பிரச்னையின் ஊடே, வில்சனின் எளிய வாழ்வும் தெளிவாக பதிவாகியுள்ளது.

வலி நிறைந்த வாழ்வை மாற்றியமைக்க முயலும் கருத்துள்ள நுால்.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us