முகப்பு » கவிதைகள் » கவிதையும் ரசனையும் தொகுதி – 1

கவிதையும் ரசனையும் தொகுதி – 1

விலைரூ.150

ஆசிரியர் : அழ­கிய சிங்கர்

வெளியீடு: விருட்சம் வெளியீடு

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என விளக்கும் நுால். ரயில் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி ரசிப்பது போல நுகர வைக்கிறது.

சமையல் குறிப்புகளை கவிதையாக்கி ரசனையுடன் பார்க்க துாண்டுகிறது. அர்த்தம் உணர்ந்து சில கவிதைகளை நீட்டியிருக்கலாம் என வலியுறுத்துகிறது. ஒரு மனிதரை இரண்டாவது முறை பார்த்தால், நாயின் குணம் என்னவாக இருக்கும் என ‘நற்பெயர்’ கவிதை வழியாக உணர்த்துகிறது.

பிள்ளைகளை தேவதையாக வளர்க்கும் பெற்றோர் குரலை கேட்கச் சொல்கிறது. பாட்டு பாடி சமையல் செய்யும் பாட்டியின் ராகத்தை, பேத்தியால் ரசிக்க முடிகிறதா என, இன்றைய குழந்தைகளிடம் கேட்கிறது. கவிதையை ரசனையுடன் வாசிக்க துாண்டும் நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us