ஆதிசங்கரர் இயற்றிய ப்ரச்னோத்ர ரத்னமாலிகா என்ற நுாலின் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. ஆன்றோர் கருத்துக்களை கூறி, ஆழ்ந்த பொருளை எளிதாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
பகவத் கீதை, மஹாபாரதம், திருக்குறள், புறநானுாறு, வள்ளலார் தோத்திரம், ஷெல்லியின் வாக்கியத்தை எடுத்துக்காட்டி உதவுகிறது. சான்றோர் அறிவுரையை அலட்சியம் செய்வதே நஞ்சு என்று குறிப்பிடுகிறது.
தாவர மனிதர், விலங்கு மனிதர், மனிதரில் மனிதர், மனிதரில் மஹான் என்ற நான்கு வகையை கூறுகிறது. வினா- – விடையாக அமைந்துள்ளது. இறுதியில், கை தட்டுதலின் பலன்களை கட்டுரையாகக் கொடுத்துள்ளது அருமை.
– முனைவர் கலியன் சம்பத்து